ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛சாகுந்தலம்'. பன்மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்த்தாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். பிப்., 17ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் இன்று(ஜன., 9) வெளியானது.
ஐதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவும் பங்கேற்றார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் இந்த பட புரொமோஷனில் அவர் பங்கேற்றுள்ளார். விழாவில் பேசிய இயக்குனர் குணசேகரன்: ‛‛இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான்'' என்று பாராட்டினார். அதைக்கேட்ட சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பேசிய சமந்தா, ‛‛எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் எப்படியும் பங்கேற்க வேண்டும்'' என வந்ததாக கூறினார்.