2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

'நேரம், பிரேமம்' படம் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையில் முதல் முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன். அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளைக் கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். அவர் ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டுவிடுவேனோ என பயந்தேன். நம்பமுடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.