'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளிவந்து 1200 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளிய படம் 'ஆர்ஆர்ஆர்'.
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான 'கோல்டன் குளோப்' விருதுகளுக்காக 'ஆர்ஆர்ஆர்' படம் இரண்டு பிரிவுகளில் 'நாமினேட்' ஆகியது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில், இன்று கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில், ‛நாட்டு.. நாட்டு…' பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
விருதை பெற்ற பின்னர் விழா மேடையில் பேசிய கீரவாணி, "இந்த விருதுக்கு நன்றி. எல்லோரும் சொல்வது போன்று இந்த விருது எனக்கானது அல்ல. எனது சகோதரரும், இந்த பட இயக்குநருமான ராஜமவுலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, ஆதரவுக்கு நன்றி. மற்றும் பிரேம் ரஞ்சித், காலபைரவா, சந்திரபோஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.
இதனையடுத்து, படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன், தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.