7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் ‛துணிவு' படமும், விஜய்யின் ‛வாரிசு' படமும் வெளியானது.
இயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில் தொடர்ந்து 3வது முறையாக வந்துள்ள ‛துணிவு'படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் அதிகாலை 4 மணிக்கும் உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்டுகளித்த அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2014ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ‛ஜில்லா' படங்கள் வெளியானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.