தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு தப்பும் தவறுமாய் 'பொங்கள்' வாழ்த்து கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. தெலுங்கு நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. தமிழ் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'நாடோடி மன்னன்' என்ற பாடல் வெளியீட்டு பற்றி நேற்று மாலை படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது.
அதில், “இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்” என 'பொங்கல்' என்பதற்கு தவறாக 'பொங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அடிக்கடி தமிழ், தமிழ் எனப் பேசும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கூட அந்த தவறுதலான போஸ்டரையே அவரது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். பலரும் அந்தத் தவறை சுட்டிக் காட்டியும் இத்தனை மணி நேரமாக அந்த போஸ்டரை யாரும் திருத்தி மீண்டும் பதிவிடவில்லை.
'வாத்தி' எனப் பெயர் வைத்துவிட்டு இப்படி 'படிக்காத' வாத்தி ஆக இருக்கிறார் இந்த வாத்தி என பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.