சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய்- 67 வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் கூறுகையில், இப்போதுதான் விஜய்யின் 67வது படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டு வருகிறேன். இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்று விஜய் 67வது படத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார் மிஷ்கின். அதோடு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் இந்த விஜய் 67 வது படத்தின் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக இன்னொரு புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.