ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித்குமார், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் தெலுங்கில் 'தெகிம்பு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியான அன்றே தெலுங்கிலும் வெளியானது. ஆனால், தெலுங்கில் எதிர்பார்த்தபடி வரவேற்பையும் பெறவில்லை, வசூலையும் பெறவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 3 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று டோலிவுட் வட்டாரத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் படம் சுமார் 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதில் பங்குத் தொகையாக 1.9 கோடி கிடைத்துள்ளது. படம் லாபத்தைப் பெற இன்னும் 1.6 கோடியாவது வசூலிக்க வேண்டுமாம். அப்போதுதான் படம் லாபத்தைத் தரும் என்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இப்படத்திற்கான ரசிகர்களின் தியேட்டர் வருகை குறைந்து காணப்படுகிறதாம்.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 'துணிவு' படம் லாபத்தைக் கொடுத்துள்ள நிலையில் தெலுங்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் அங்கு படத்தை சரியாக புரமோஷன் செய்யவில்லை என்கிறார்கள். அஜித், விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களை பான் இந்தியா படம் போல எப்போது புரமோஷன் செய்யப் போகிறார்கள் என அவர்களது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை. அந்த விதத்தில் இரண்டு ஹீரோக்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது ரசிகர்களுக்கும், படத்தின் வினியோக உரிமையை வாங்கியவர்களுக்கும் வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.