ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். இதில் காளி உள்ளிட்ட சாமி வேடம் அணிந்திருப்பவர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். டில்லி, உத்தரபிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீனா மணிமேகலையை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளில் என்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன் மறு உத்தரவு வரும் வரை லீனாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது.