ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொச்சி சட்டக்கல்லூரியில் நடந்த விழாவில் நடிகை அபர்ணா பாலமுரளி கலந்து கொண்டார். அப்போது மேடையேறிய மாணவர் ஒருவர் அபர்ணாவின் தோளில் கைபோட முயன்றார். அவரிடமிருந்து நழுவிய அபர்ணா அந்த மாணவரின் அத்துமீறலை அந்த இடத்திலேயே கண்டித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்தது என்றும், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரது உடலை தொடுவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அபர்ணா பாலமுரளி கூறினார். இது குறித்து நான் புகார் கூற விரும்பவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நடந்த சம்பவத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர் பேரவை மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறி நடந்து கொண்ட கல்லூரி மாணவரை சட்டக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.