திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' அதேபெயரில் தமிழில் ரீ-மேக் ஆகி உள்ளது. கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக ராகுல் நடித்துள்ளார். பிப்., 3ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், ‛‛ஆணாதிக்கம் இன்னமும் இருக்கிறது. நகரங்களில் சற்று குறைந்து உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது. பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் இல்லை. எந்த கடவுளும் என் கோயிலுக்கு இவுங்க வரணும், அவுங்க வரக்கூடாது என சொல்லவில்லை. இது நாமாக வகுத்து கொண்ட சட்டங்கள். எந்த கடவுள் அப்படி சொல்லியிருக்கிறார், நீங்கள் சொல்லுங்க பார்ப்போம்.
சபரிமலை என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கோயிலிலும் எந்த கடவுளும் இப்படி செய்யக்கூடாது, அப்படி செய்யக்கூடாது, இத சாப்பிடனும், சாப்பிடக்கூடாது, இதெல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. இது நாம் உருவாக்கியது. இதற்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஒருபோதும் நம்புவதில்லை.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.