ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்த வருடமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் முதல் முறையாக நடிக்கும் இப்படத்திற்காக அவருக்கு முந்தைய சம்பளத்தை விட அதிகமான சம்பளம் பேசப்பட்டது என்றும் சொன்னார்கள்.
'துணிவு' படம் வந்து பெரும் வெற்றி பெற்ற பிறகு அஜித்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அடுத்தும் ஆக்ஷன் படமாகக் கொடுப்பதுதான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் என்று யோசிக்கிறாராம். விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் படங்களாகத்தான் இருக்கும். அவர் ஆக்ஷன் படங்களை இயக்கியது கிடையாது.
எனவே, அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுக்கக் கூடிய இயக்குனரின் படத்தில் நடிக்கலாம் என்பதுதான் அந்த முடிவாம். அஜித் 62க்கு வேறு ஒரு இயக்குனர், அதற்குப் பிறகு வேண்டுமானால் அஜித் 63க்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
தற்போது அஜித், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் லண்டனில் லைக்கா குழுமத் தலைவர் சுபாஷ்கரனுடன் பேசி வருகிறார்களாம். ஓரிரு நாட்களில் யார் யார் எந்தப் படம் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.