சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
சின்னத்திரை நடிகைகளான சைத்ரா ரெட்டியும், நக்ஷத்திராவும் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வருகின்றனர். சைத்ரா தற்போது கயல் தொடரில் நடித்து வருகிறார். நக்ஷத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியல் எதிலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில், தோழியை காணச் சென்ற சைத்ரா ரெட்டி நக்ஷத்திராவின் கர்ப்பமான வயிறை முத்தமிட்டும், கட்டி அணைத்தும் தன் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இருவரின் நட்பையும் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.