சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிக்பாஸ் சீசன் 8ல் சின்னத்திரை பிரபலமான தீபக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இவருடைய கேம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில சமயங்களில் விஜய் சேதுபதியிடமே துணிச்சலாக தனது கருத்தை சொல்லிவிடுகிறார். அதேசமயம் சிலர் தீபக் பாரபட்சமாக பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் அவருடன் இணைந்து நடித்த நக்ஷத்திரா தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'தீபக் உண்மையான ஜெண்டில் மேன். மனிதர்களை சமமாக பார்ப்பவர். எல்லோரையும் அவர் சமமாக தான் நடத்துவார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் சொல்லியது கிடையாது. ஆனால், தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் இப்போது இதை கூறுகிறேன்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.