தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'வாரிசு'. ஜனவரி 11ம் தேதி வெளிவந்த அப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் திரையிட்டனர். நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வராமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற விமர்சனம் வந்ததால் அந்தப் படம் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தது.
அந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார். அவர் இப்போது தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார். நாளை அப்படம் வெளியாக உள்ள நிலையில் 'வாரிசு' படத்தைப் போலவே இன்று இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் பத்திரிகையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆனால், 'வாரிசு' படம் போல குடும்பத்தினருடன் பார்க்க அனுமதி இல்லை, பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்துவிட்டார்கள்.
'வாரிசு, வாத்தி' இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு படங்களையும் தமிழில் ஒரே தயாரிப்பாளரே வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வாரிசு' வழியில் 'வாத்தி' செல்கிறார், என்ன நடக்கப் போகிறது என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.