ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் நிறைய முண்ணனி நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர் தாணு. சமீபத்தில் அவர் தயாரிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன், நானே வருவேன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. தற்போது ஆளவந்தான் திரைப்படத்தை ரீ மாஸ்டர் செய்து ரீ ரிலீஸ் செய்ய மும்முரமாக உள்ளார். மற்றொரு பக்கம் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு உள்ளார். இதில் கதாநாயகனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளிவந்து உள்ளது.