இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல ஆண்டுகள் தனக்கென தனி இடத்தைப் பிடித்து திரையுலகத்தில் மகாராணியாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஹோட்டல் அறையில் இருந்த பாத்ரூமில் இறந்து கிடந்தார். 54 வயதில் அவரது அகால மரணம் இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார். இன்னும் அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை. இன்னும் சில நாட்களில் அவரது அம்மாவின் நினைவு தினம் வருகிறது. ஆனால், இன்றே அவரது அம்மா பற்றிய நினைவுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“எல்லா இடங்களிலும் உன்னை நான் இன்னும் தேடுகிறேன் அம்மா. உன்னைப் பெருமைப்படுத்தும் விதமாக எல்லாவற்றையும் நான் இன்னும் செய்கிறேன் என நம்புகிறேன். நான் எங்கு சென்றாலும், என்னென்ன செய்தாலும் அது உன்னில் ஆரம்பித்து உன்னில்தான் முடிகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.