வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.
மகிழ்திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆன நிலையில், இப்படத்திற்காக அவருக்கு சென்னையில் தனி அலுவலகம் கூட அமைத்துக் கொடுத்துவிட்டார்களாம். படத்தின் கதாநாயகி யார், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் உறுதி செய்த பிறகு ஒரு முழுமையான அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதம்தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடும் விதத்தில் படம் உருவாகலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.