இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள அவரது 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர்.
மகிழ்திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதி ஆன நிலையில், இப்படத்திற்காக அவருக்கு சென்னையில் தனி அலுவலகம் கூட அமைத்துக் கொடுத்துவிட்டார்களாம். படத்தின் கதாநாயகி யார், மற்ற நடிகர்கள், நடிகைகள் யார், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் உறுதி செய்த பிறகு ஒரு முழுமையான அறிவிப்பை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு எப்படியும் ஏப்ரல் மாதம்தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. பெரிய பட்ஜெட்டில் படத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். எனவே, படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். 2024 பொங்கலுக்கு படத்தை வெளியிடும் விதத்தில் படம் உருவாகலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.