ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனிடையே, இந்த வருடம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' பாடலை மேடையில் நேரடியாகப் பாட உள்ளார்கள். தெலுங்குப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் பாடப் போகிறார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்பு மிக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.