சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
உலக அளவில் மதிப்பு மிக்க திரைப்பட விருதுகளாகக் கருதப்படும் விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த வருட விருதில், 'சிறந்த ஒரிஜனல் பாடல்' பிரிவில் தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' குழுவினர் தற்போது இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் உள்ளனர்.
இதனிடையே, இந்த வருடம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் 'நாட்டு நாட்டு' பாடலை மேடையில் நேரடியாகப் பாட உள்ளார்கள். தெலுங்குப் பாடலைப் பாடிய ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா இருவருமே ஆஸ்கர் மேடையில் பாடப் போகிறார்கள். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மதிப்பு மிக்க நிகழ்வாக இது கருதப்படுகிறது.