ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
இந்தாண்டு பொங்கலுக்கு வாரிசு, துணிவு படங்கள் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்றன. இரண்டு படங்களும் இந்தாண்டின் 50 நாட்களை கடந்த படமாக அமைந்துள்ளது.
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் மற்றும் பலர் நடித்து இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் 300 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த வாரம் 'வாரிசு' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஓடிடியில் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையிலும் படம் சென்னை, கோவை ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது.
இப்படத்துடன் வெளிவந்த அஜித் நடித்த 'துணிவு' படம் இருபது நாட்களுக்கு முன்பே ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் 'துணிவு' திரைப்படம் இன்னும் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பெங்களூரு ஆகிய ஊர்களில் சில தியேட்டர்களில் 50வது நாளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய் 'வாரிசு' படத்திற்குப் பிறகு தன்னுடைய அடுத்த படமான 'லியோ' படத்தில் நடிக்கப் போய்விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது.