இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் 4 பாகத்தை உருவாக்க உள்ளார். கதாநாயகனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு வெளியேறினார். தற்போது சுந்தர். சி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அரண்மனை 4ம் பாகம் இரு கதாநாயகிகளை கொண்டுள்ள கதைக்களமாக இருப்பதால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே அரண்மனை 3 படத்தில் ராஷி கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.