தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் வகையில் சென்னை பாரிமுனையில் அமைச்சர் சேகர்பாபு, மு.க. ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , நடிகர் யோகி பாபு உள்பட பலர் உடன் இருந்தார்கள்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‛‛முதல்வர் ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான். படிப்படியாக உயர்ந்து தமிழகத்தின் முதல்வராகி உள்ளார். இது மக்கள் அவருக்கு கொடுத்துள்ள அங்கீகாரம் ஆகும். அவர் நீண்டநாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.