தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தென்னிந்திய டப்பிங் யூனியனின் தலைவராக நடிகர் ராதாரவி இருக்கிறார். பொதுச்செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இந்த யூனியன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் உள்ளது. இது அமைந்துள்ள கட்டடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகும் ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையாம். அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தென்னிந்திய டப்பிங் யூனியன் வளாகத்திற்கு சீல் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.