இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய டப்பிங் யூனியனின் தலைவராக நடிகர் ராதாரவி இருக்கிறார். பொதுச்செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இந்த யூனியன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் உள்ளது. இது அமைந்துள்ள கட்டடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகும் ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையாம். அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தென்னிந்திய டப்பிங் யூனியன் வளாகத்திற்கு சீல் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.