தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

குனீத் மோங்கா தயாரிப்பில், கார்டிகி கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1969ம் வருடம் இதே பிரிவில் 'த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்' என்ற குறும்படமும், 1979ம் ஆண்டு 'அன் என்கௌன்டர் வித் பேசஸ்' என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.
முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது கதையுடன் அந்த தேசியப் பூங்காவில் ஆதரவற்று வந்த ரகு என்ற யானையை அவர்கள் வளர்ப்பது பற்றியும், பின் அது அவர்களை விட்டு செல்வது பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான படமாக அது அமைந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.