‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி |
குனீத் மோங்கா தயாரிப்பில், கார்டிகி கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற டாகுமெண்டரி குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1969ம் வருடம் இதே பிரிவில் 'த அவுஸ் தட் ஆனந்தா பில்ட்' என்ற குறும்படமும், 1979ம் ஆண்டு 'அன் என்கௌன்டர் வித் பேசஸ்' என்ற படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டியிட்டன. ஆனால், அவை விருதுகளை வெல்லவில்லை.
முதுமலை தேசியப் பூங்காவில் யானைகளை வளர்க்கும் பொம்மன், பெல்லி என்ற தம்பதிகளைப் பற்றிய கதையாக இந்த 'த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது கதையுடன் அந்த தேசியப் பூங்காவில் ஆதரவற்று வந்த ரகு என்ற யானையை அவர்கள் வளர்ப்பது பற்றியும், பின் அது அவர்களை விட்டு செல்வது பற்றியும் ஒரு உணர்வுபூர்வமான படமாக அது அமைந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2022ம் ஆண்டு இந்த குறும்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது.