இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமந்தா நடித்து முடித்துள்ள படம் 'சாகுந்தலம்'. புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை குணசேகரன் இயக்கி உள்ளார். சமந்தாவுடன் தேவ் மோகன், சச்சின் கடேகர், மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
காளிதாசர் எழுதிய 'சாகுந்தலம்' என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா அதுபற்றி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது : சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் (தயாரிப்பாளர்கள்) நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். என்று எழுதியுள்ளார்.