சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
பிரபல நடிகர் யஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இந்த நிலையில் கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் அடிக்கடி துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவரோடு இனிமேல் நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யஷ் சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யஷ் ரசிகையாகவே இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார் .