தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் அவர் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கிஷோர். அதோடு பெங்களூரில் தான் இயற்கை விவசாயம் செய்து விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது தனது மனைவி, மகன்களுடன் இயற்கை விவசாயத்தில் கிஷோர் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.