ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தசரா. நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒத்தெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் கேஜிஎப் பாணியில் நிலக்கரி சுரங்க பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “மகாநதி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அதிர்வு, எனக்கு இந்த படத்தில் நடிக்கும்போது மீண்டும் ஏற்பட்டது. இந்த படத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். படத்தில் வித்தியாசமாக தெலுங்கு பாஷை பேச வேண்டி இருந்தது. இதற்காக எனக்கு ஆரம்பத்திலேயே தெலுங்கு பேராசிரியர் ஒருவரும் துணை இயக்குனர் ஒருவரும் பேசுவதற்கு பயிற்சி அளித்தார்கள். அதனால் இந்த படத்தில் என்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்து விட்டேன். வழக்கமாக என்னுடைய படங்களுக்கு இதை விட இன்னும் மூன்று நாட்கள் அதிகமாக தான் ஆகும்” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.