நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
சென்னை அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நேற்று நடந்த பிரிமியர் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த மூன்று வருடங்களாக கொரானோ தாக்கத்தால் சென்னையில் பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
தோனி கலந்து கொள்ளும் கடைசி பிரிமியர் கிரிக்கெட் தொடர் இதுவாக இருக்கும் என்ற யூகத்தில் சென்னையில், சென்னை அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வயது வித்தியாசம் இன்றி வெளியூர்களில் இருந்து கூட ரசிகர்கள் நேற்று சென்னை வந்து போட்டியை கண்டு ரசித்தனர்.
சினிமா பிரபலங்களிடமும் சென்னை அணிக்கு அதிக ஆதரவு உண்டு. நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியை தனுஷ், சிவகார்த்திகேயன், சதீஷ், ஹரிஷ் கல்யாண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.