ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியானது. சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று பெரிய வசூலைக் குவித்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகியது. அனைத்து மொழிகளையும் சேர்த்து 26 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது. இதனிடையே, 'பொன்னியின் செல்வன் 2' வெளியாவதை முன்னிட்டு, அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஏப்ரல் 21ம் தேதி 'பொன்னியின் செல்வன் 1' படத்தை வெளியிட உள்ளதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன், “மணிசாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென…
அவர் பதில்….,” என மணிரத்னத்தின் வாட்சப் பதிலை வெளியிட்டுள்ளார். அதில்தான் மணிரத்னம் முதல் பாக வெளியீடு பற்றி பதிலளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் வெளியீட்டின் போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தையே தான் இன்னும் பார்க்கவில்லை என பார்த்திபன் பேசியிருந்தார். அதை பல ரசிகர்களும் கிண்டலடித்திருந்தனர்.
ஏப்ரல் 21ல் முதல் பாகம் மீண்டும் வெளியாகும் போதாவது பார்த்திபன் பார்ப்பாரா ?. ஒரு வேளை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சுயநலமாக முதல் பாகத்தை மீண்டும் வெளியிடுங்கள் என கேட்டிருப்பாரோ ?.