இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் ஷங்கர் தனது திரையுலக பயணத்தில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து விட்டார். அதிலும் தற்போது ஒரு புதிய அனுபவமாக தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என இரண்டு படங்களை ஒரே சமயத்தில் மாறி மாறி இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படம் கொரோனா காலகட்டத்தில், சில காரணங்களால் மேற்கொண்டு நகாராமல் தடைப்பட்டு நின்றபோது, தெலுங்கில் படம் இயக்க முடிவு எடுத்து ராம்சரண் படத்தை ஆரம்பித்தார் ஷங்கர். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.
பொதுவாகவே தயாரிப்பாளர்களை பொருத்தவரை தில் ராஜு ரசிகர்களிடம் நெருங்கி பழக முயற்சிப்பவர். பிரபல ஹீரோக்களின் படங்களை தயாரிக்கும்போது அப்டேட்டுகளை அள்ளி கொடுப்பவர். அந்த வகையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாடியபோது, தற்போது ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்திற்கு முதலில் கதாநாயகனாக முடிவு செய்யப்பட்டவர் பவன் கல்யாண் தான் என்கிற தகவலை தெரியப்படுத்தியுள்ளார் தில் ராஜு.
இயக்குனர் ஷங்கர் இந்த கதையை தன்னிடம் கொண்டு வந்தபோது, இது பவன் கல்யாணை வைத்து பண்ண வேண்டிய படம் என்றுதான் வந்தாராம். ஆனால் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவர் சொன்ன கதையை கேட்டுவிட்டு இதற்கு ராம்சரண் தான் மிக பொருத்தமாக இருப்பார் என ஷங்கரிடம் கூறி அவரை கன்வின்ஸ் செய்ததாக ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் தில் ராஜு.