சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் 'தங்கலான்'. இதில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடந்து வந்தது. கோலார் தங்கச் சுரங்கம் உருவான போது அங்கு தமிழக தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த 'பிகே ரோசி' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும்.
கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். அடுத்த என்ன படம் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கமல் நடிக்கும் படத்திற்கான கதையையும், 'சர்பட்டா பரம்பரை' 2ம் பாகத்திற்கான கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்றார்.