இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் படம் 'தங்கலான்'. இதில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கத்தில் நடந்து வந்தது. கோலார் தங்கச் சுரங்கம் உருவான போது அங்கு தமிழக தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த 'பிகே ரோசி' திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கேஜிஎப்பில் மிகப்பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். 55 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முடிந்துவிடும்.
கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளோம். படப்பிடிப்பு கடும் சவாலாக இருந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மக்களுக்கு பிடிக்கும். இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும். அடுத்த என்ன படம் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை. கமல் நடிக்கும் படத்திற்கான கதையையும், 'சர்பட்டா பரம்பரை' 2ம் பாகத்திற்கான கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்றார்.