திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. பழைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் சொல்லியிருந்தாலும் சில பாடல்கள் படத்துடன் ஒட்டவில்லை என்ற கருத்தே அதிகமாக இருந்தது. ஆனாலும், படத்தில் கொஞ்சமாக இடம் பெற்ற 'அலை கடலாய்' பாடல் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இம்மாதம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் 'ஸ்லோ பாய்சன்' ஆக ரசிகர்கள் மனதில் நுழைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் சிங்கிளான 'அக நக' லிரிக் வீடியோ சக்திஸ்ரீ கோபாலனின் இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. அப்பாடல் கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் பாடலாக அமைந்தது.
அடுத்து நேற்று 'வீரா ராஜ வீர' லிரிக் வீடியோ வெளியாகியது. இப்பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஜெயம் ரவி, சோபிதா துலிபலா இடையிலான காதல் பாடலாக உள்ளது. இரண்டு பாடல்களையும் பைந்தமிழ் வரிகளுடன் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் படத்திற்கேயுரிய 'சரித்திர டச்'சை உணர முடிகிறது.