தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி'' உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தான் நடித்த படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் தனுஷ் தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை விட்டு ஒதுங்கி இருந்தவர்.
இப்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கர்ணன் என்ற வெற்றி படம் வெளியானது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணுகிறார்கள். தனுஷ் தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 15வது படமாக இந்தப்படம் உருவாகிறது. தனுஷ், மாரி செல்வராஜ் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர். அதை முடித்த பின் இவர்கள் இணைந்து படம் பண்ண உள்ளனர். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் தனுஷ்.