ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்று பெருமை சேர்த்தது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும், அதற்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற அப்படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புரமோஷன் நிகழ்வுகளிலும் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யா கலந்து கொள்ளவில்லை. ஆஸ்கர் விருத வென்ற பின் விருதுகளுக்காக செலவழித்தது பற்றிய பேட்டி ஒன்றில் தான் எந்த ஒரு செலவையும் செய்யவில்லை, ராஜமவுலி எவ்வளவு செலவு செய்தார் என்பது தெரியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி, சந்திரபோஸ் ஆகியோருக்கு தெலுங்கு திரையுலகத்தினர் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். அதில் தெலுங்குத் திரையுலகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தயாரிப்பாளரான தனய்யா கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காக அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு அவர் பெயரளவில்தான் தயாரிப்பாளர் என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள். இது குறித்து தனய்யா சொன்னால்தான் உண்மை என்னவென்பது தெரிய வரும்.