ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி வெளியான படம் 'அயோத்தி'. விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் குவிந்தது.
கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அயோத்தி' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் செய்துள்ளார். “அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!,” என்று பாராட்டியுள்ளார்.
அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து சசிகுமார், “நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்,” என டுவீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சசிகுமார் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி, “உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்... நன்றி சார்,” என மகிழ்ந்துள்ளார்.