அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் பலர் நடித்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி வெளியான படம் 'அயோத்தி'. விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் குவிந்தது.
கடந்த வாரம் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'அயோத்தி' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் செய்துள்ளார். “அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!,” என்று பாராட்டியுள்ளார்.
அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்து சசிகுமார், “நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்,” என டுவீட் செய்துள்ளார். 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த், சசிகுமார் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தி, “உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்... நன்றி சார்,” என மகிழ்ந்துள்ளார்.