தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது.
இதனால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 23ம்தேதி சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தின் அலுவலத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் தவிர துணைத் தலைவர்கள் பதவிக்கு சபரிகிரிசன், தினா, மோகன மகேந்திரன், தவசிராஜ், மாரி ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜ ரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் பெப்சி அமைப்பில் இணைந்திருக்கும் 24 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.