தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
யதார்த்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். தற்போது அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'வைப்பர்' என பெயரிட்டு அதற்கான டை்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர் மணிமாறன் நடராசன்.