குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றி தோல்விகளை கடந்து, தற்போது சரத்குமார் உடன் இணைந்து ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விதார்த் நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் பூஜை படப்பிடிப்பு உடன் துவங்கியுள்ளது.
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை சகோ கணேசன் என்பவர் இயக்குகிறார்.
விதார்த் உடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜூ அஸ்வினி, ஜான் விஜய், அதுல்யா சந்திரா, ஸ்வேதா தொரத்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜிஷ் அசோக் இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.