தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சி.ஜ.ஜ தக்ஷின் தென்னிந்திய ஊடக விழாவில் தனுஷ் பங்கேற்றார். அந்த விழாவில் தனுஷ்க்கு யூத் ஜகான் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனுஷ் பேசியது ; நான் 40 வயதில் யூத் ஜகான் விருது பெறுகிறேன். வெல்லவும், சாதிக்கவும் இன்னும் நிறைய உள்ளது. எனக்கு ஒரு லட்சிய கனவு உள்ளது. அந்த கனவின் காரணமாக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு 30 வயது ஆகும் போது 50 வயதில் உள்ளவர்கள் என்னை பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது . 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு தனுஷ் சிரித்து கொண்டே கூறினார்.