தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற சி.ஜ.ஜ தக்ஷின் தென்னிந்திய ஊடக விழாவில் தனுஷ் பங்கேற்றார். அந்த விழாவில் தனுஷ்க்கு யூத் ஜகான் விருது வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனுஷ் பேசியது ; நான் 40 வயதில் யூத் ஜகான் விருது பெறுகிறேன். வெல்லவும், சாதிக்கவும் இன்னும் நிறைய உள்ளது. எனக்கு ஒரு லட்சிய கனவு உள்ளது. அந்த கனவின் காரணமாக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கனவு காண்கிறேன். எனக்கு 30 வயது ஆகும் போது 50 வயதில் உள்ளவர்கள் என்னை பார்த்து இளமையாக இருப்பதாக கூறினார்கள். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது . 60 வயது உள்ளவர்கள் இன்னும் நீங்கள் இளமையாக உள்ளீர்கள் என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு தனுஷ் சிரித்து கொண்டே கூறினார்.