ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். ரகுல் பீர்த் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24 ஏ.ம் நிறுவனம் மற்றும் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல வருட கிடப்பில் கிடந்த இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ் அளித்த பேட்டியில், ‛‛இந்த படத்தில் வரும் அந்த ஏலியன் பொம்மைக்காக ரூ.2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும் தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அந்த ஏலியனையும் அழைத்து வருவோம்.
அயலான் படம் ‛ஈ.டி' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்ல. இந்த படத்தின் கதை முழுக்க வேறுப்பட்டு இருக்கும். இதற்கு முன்பு இந்திய சினிமாவில் 4000 வி.எப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் கொண்ட திரைப்படம் பிரமஸ்தரா. ஆனால் அயலான் அதை விட அதிகமாக 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் நிறைந்த படமாக மாறியுள்ளது,'' என்று தெரிவித்துள்ளார்.