தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.
இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர்.
உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யை சந்தித்த படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். பிறகு விஜயிடம் மார்க் ஆண்டனி படத்தின் டீஸரை காண்பித்தனர். இதனை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டினார்.
இச்சந்திப்பின்போது, விஜய்யிடம் விஷால் கூறுகையில், ‛எனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை 'துப்பறிவாளன் 2' மூலம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளேன். உங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளேன்' என்றார். இதனை கேட்ட விஜய், ‛நீ வா நண்பா.. நான் இருக்கிறேன்.. சேர்த்து பயணிப்போம்' எனக் கூறினார்.
இச்சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.