தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்து பாராட்டை பெற்ற நடிகர் ஜெயம் ரவி, கடந்த சில நாட்களாக ‛சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் வலம் வருகிறார். இதற்கான காரணம் மற்றும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து கூறியதாவது: 'பொன்னியின் செல்வன் 2' ம் பாகத்துக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. என் நடிப்புக்கும் பாராட்டுகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அடுத்தும் இது போன்ற 'மல்டி ஸ்டார்' படங்களில் நடிக்க வேண்டுமெனில் அந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்னம் போன்ற இயக்குநர் என்றால் அது சாத்தியமாக இருக்கும்.
நான் இயக்குநர் மணிரத்னத்திடம் அவ்வப்போது 'ஒன்லைனர்' சொல்வேன். அதைக் கேட்ட அவர், 'நீ எழுதலாம்' என்றார். அவர் சொன்ன பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். நான் நடித்துள்ள 'இறைவன்' படம் முடிந்துவிட்டது. அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது 'சைரன்' படத்தில் நடித்து வருகிறேன். அதற்காகத்தான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக். அதன் திரைக்கதை புதுவிதமாக இருக்கும். அடுத்து புதிய இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது கொஞ்சம் பேன்டஸி படம். இவ்வாறு அவர் கூறினார்.