ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் நேற்றே நாம் சொன்னபடி 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் வெளியான நான்கே நாட்களில் 200 கோடி வசூல் என்பது சாதாரணமல்ல. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து வருகிறார்கள்.
முதல் பாகம் அளவிற்குக் கலகலப்பாக, சுவாரசியமாக இல்லை என்று சிலர் சொன்னாலும், இரண்டாம் பாகத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருப்பது தெரிகிறது. நேற்று வரை விடுமுறை நாள் என்பதால் வசூல் மழை பெய்திருக்கிறது.
இருப்பினும் கோடை விடுமுறை நாட்கள் என்பதால் வேறு எந்த பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாகவில்லை என்பதால் வசூல் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் 32 நாட்களில் தான் 500 கோடி வசூலைத் தொட்டது.
அதைவிடக் குறைந்த நாட்களில் 'பொன்னியின் செல்வன் 2' 500 கோடி வசூலைத் தொடுமா என்பதே இப்போதைய கேள்வி. அது நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு புதிய சாதனையாக அமையும்.