படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகை வனிதா விஜயகுமார் 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். சில ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்ற தொழில் அதிபரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமும் விவாகரத்து பெற்றார்.
இதை தொடர்ந்து யுட்யூப் சேனல் தொடங்கிய வனிதா, அந்த சேனலுக்கு விஷூவல் எடிட்டராக வந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக பல பிரச்சனைகள் எழுந்தது.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவும், பீட்டர் பாலும் பிரிந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பீட்டர் பால் காலமானார். இதுதொடர்பான செய்திகள் வெளியானது. அதில் வனிதாவின் கணவர் என பீட்டர் பால் என அனைவரும் குறிப்பிட்டனர். பீட்டர் பால் மறைவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமல் இரங்கல் தெரிவித்தார் வனிதா.
இந்த நிலையில் வனிதா தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அது அதே ஆண்டு முடிவடைந்துவிட்டது. நாங்கள் பிரிந்துவிட்டோம். நான் பீட்டர் பாலின் மனைவி அல்ல. அவர் என் கணவரும் அல்ல. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள். நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.