விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் த்ரிஷா, நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை தோழிகளுடன் ஷிர்டிக்குச் சென்று அங்கு கொண்டாடியுள்ளார். சாய்பாபா கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தையும், கேக் வெட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “உங்களது அளவுக்கதிகமான அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது இதயம் நன்றியுணர்வுடன் வெடிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய ஆன்மீக ஈடுபாடு குறித்து அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத த்ரிஷா நேற்று தன்னுடைய பிறந்தநாளை ஷிர்டியில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சில நடிகைகள் பார்ட்டி வைத்து கொண்டாடும் பிறந்தநாளை பயபக்தியுடன் கொண்டாடியுள்ளார் த்ரிஷா .