'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ஹிந்தியில் அறிமுகமாகி தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறவர் அதா சர்மா. தமிழில் ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2' படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படமான ‛செல்பி' சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் அதா சர்மா நடித்துள்ள ஒரு படம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. அது ‛தி கேரளா ஸ்டோரி'.
‛‛கேரளா ஸ்டோரி படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரின் ஏற்பாட்டின் பேரில் கதையில் குறிப்பிடப்படும் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்டறிந்தேன். அழகான குடும்பங்களில் இருந்து அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையை கேட்டு கலங்கினேன்.
படம் பற்றி வரும் புகார்களையும், விமர்சனங்களையும் நான் அறிவேன். 2 நிமிட டிரைலரை பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம். இரண்டு மணி நேர படத்தை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த படத்தில் நடித்தற்காக கேரளாவை சேர்ந்த பெண்கள்கூட எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் அரசியல் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பயங்கரவாத்தையும், மனிதநேயத்தையும் பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்போம்''. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.