ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் அந்த வீட்டில் குடியேறத் தயங்கினர். விலைக்கு வாங்கிக் கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா அந்த வீட்டை வாங்க உள்ளார். அடா சர்மா பரபரப்பை கிளப்பி 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தவர், தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தார், 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அடா சர்மா “பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முழுமையான பிறகு நானே முறைப்படி அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.