தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நாட்களில் மீடியாக்களுக்கு சரியான தீனியாக சில நிகழ்வுகள் நடந்தன. முதலில் 'கூலி' படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்கம் போல ரஜினிகாந்தின் மேடைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் அஜித் திரையுலகில் நுழைந்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம் பெற்ற சில வரிகள் சிலரை மறைமுகமாகக் குறிப்பிட்டதாகவே மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களாக அவர்களது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி செய்ததை நேற்று விழாவாகக் கொண்டாடினார்கள். அதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் பக்கம் போனாலும், யு டியூப் தளங்கள் பக்கம் போனாலும் ரஜினி, கமல், அஜித், சூர்யா என செய்திகள் நிறைந்து காணப்படுகிறது.