இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தொழிலதிபரான வருண் மணியன் என்பவரைக் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் 2015ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை செல்லாமல் இருவரும் திடீரெனப் பிரிந்தார்கள். அதன்பின் வருண் மணியன், நடிகை பிந்து மாதவி இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் வெளிவந்தன. அதனால், இருவரும் காதலிக்கிறார்களா என்ற கிசுகிசுவும் வந்தது.
எப்போதோ நடந்த அந்த விஷயம் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'நியூசென்ஸ்' என்ற வெப்சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பிந்து மாதவியிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிந்து மாதவி, “அது உண்மைதான். ஆனால், இரண்டும் வெவ்வேறு காலத்தில் நடந்தது, ஒரே சமயத்தில் நடந்ததல்ல,” என்றார். நிகழ்ச்சி தொகுப்பாளர், “த்ரிஷா பிரிந்த பிறகு நீங்கள் 'டேட்டிங்' செய்தீர்களா என்றதற்கு 'ஆமாம்' என பதிலளித்தார் பிந்து மாதவி.
'நியூசென்ஸ்' என்ற இந்த தெலுங்கு வெப்சீரிஸ், 20 வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின், மதனபள்ளியில் நடப்பதாக க்ரைம், அரசியல், பத்திரிகைத் துறை கலந்த தொடராக உருவாக்கப்பட்டுள்ளது. மே 12ம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.