இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என்று புகார் செய்தார். இதை தொடர்ந்து வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் நகைகளை மீட்டனர் வழக்கு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது சொகுசு காரின் சாவியை காணவில்லை என்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஏப்ரல் 23ம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிந்து போலீசார் கூறியதாவது : சொகுசு காருக்கு போலியான சாவி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் மட்டும் மாற்று சாவியை பெற முடியும். அதற்கும் போலீசாரின் எப்.ஐ.ஆர். நகலை கார் நிறுவனத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே சாவி கிடைக்கும். எனினும் சவுந்தர்யாவின் கார் சாவி தொலைந்ததா அல்லது திருடப்பட்டதா என விசாரிக்கிறோம் என்றனர்.